உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு வாரம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வு

போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒளிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமத்தி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பில் பட்டிமன்றமும், வீதி நாடகமும், இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கான சித்திரப் போட்டிகளும், இடம்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க