உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

கிழக்கில் 30 மில்லியன் செலவில் வீதி அபிவிருத்தி திட்டம்

கிழக்கில் ரூ .30 மில்லியன் செலவில் வீதி அபிவிருத்தி திட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் மூலம் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறிய தலைவர் சூரியராச்சி, இந்த திட்டத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு ஐந்து வருடங்கள் செல்லும் என கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளை இந்த வீதி உள்ளடக்குவதாக அமைந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க