உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

மன்னார் மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று மதியம் ஊக்குவிப்பு தொகை மற்றும் பரிசிலிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையின் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள 9 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு ஊக்குவிப்பு தொகை மற்றும் பரிசிலிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க