உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அட்டை பிடிப்பு என்ற பெயரில் கடல் வளங்கள் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோபகுதிகளில் தங்கியிருந்து தொழில் செய்துவரும் தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்களால் கடல் வளங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றது என சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் மனுகையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட சாலைப்பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் சுமார் 500ற்கும் மேற்பட்ட படகுகள் வைத்து தொழில் செய்து வருகின்றார்கள்.

இவர்களுக்கான தொழில் அனுமதி கடற்தொழில் அமைச்சினால் கொடுக்கப்பட்ட போதும் அட்டை பிடிப்பு என்ற பெயரில் அனுமதியினை பெற்று சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் வடக்கில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படாவிடின் கடற்தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அட்டை பிடிப்பு தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சாலைப்பகுதியில் நிலைகொண்டு 40 குதிரைவலு கொண்ட இயங்திரங்களை பயன்படுத்தி இரவு பகலாக சாலையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைவரை தமது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனால் கரையோர வளம் பாதிக்கப்பட்டுள்ளது, கரைவலைதொழில் செய்பவர்களின் கம்பான்களை வெட்டுவதும் வலைகளை வெட்டுவதும் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது.

கடலில் சங்குகளை எடுப்பதும் பாரிய ஆயுதங்களால் மீன்களை குத்திப்பிடிப்பதும், சுருக்கு வலைகளை பயன்படுத்துவதும், குண்டுவைத்து மீன்களை பிடித்தும் அழித்து வருகின்றார்கள்

அட்டை பிடிப்பு என்ற பெயரில் வந்து பலநோக்கங்களை வடகடலில் உள்ள வளங்களை அள்ளி செல்கின்றார்கள் அத்துடன் சட்விரோத மதுபோதைகள் உள்ளிட்டவற்றையும் கடத்துகின்றார்கள்.

 

கருத்து தெரிவிக்க