உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அனுர சேனாநாயக்கவிற்கு பிணை

படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட காவல்துறை பிரதி மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணதிற்கு தொடர்புடைய ஆதாரங்களை மறைத்த குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கின் பிரதிவாதியான அநுரசேனாநாயக்க 20இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அதேநேரம் இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க