உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

20 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 20 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியைக்கொண்ட ஐஸ் போதைப்பொருள் இன்று மாலை கொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டநிலையில் இதனை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 37வயதான மலேசிய பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை சுங்கப்பிரிவினர் காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க