உள்நாட்டு செய்திகள்புதியவை

மக்கள் வங்கி தனியாருக்கு வழங்கப்படமாட்டாது – நிதி அமைச்சு உறுதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் வங்கி தனியாருக்கு வழங்கப்படமாட்டாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கி தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக குற்றச்சாட்டுக்கள், முன்வைக்கப்படுகின்ற நிலையில், அவர் விஷேட அறிக்கை ஒன்றை இன்று புதன்கிழமை வெளியிட்டு அதனூடாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மக்கள் வங்கி எதிர்நோக்கியுள்ள நிதி சிக்கலை காரணம் காட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக பொய்யான கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த 1961 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி மக்கள் வங்கிச் சட்டத்தில் திருத்தம் செய்ய நிதி அமைச்சு முன்வைத்த திட்டத்தைத் தொடர்ந்து இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் மங்கள் இதன்போது தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க