உள்நாட்டு செய்திகள்புதியவை

தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார்: தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமை குறித்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் மஹிந்த தேஷப்பிரிய கூறினார்.

கருத்து தெரிவிக்க