வெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்தது: 10 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிறுவனத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக எரிவாயு குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்தது.

இந்த கோரா விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்ககளினால் கடும் போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க