உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ருவான் விஜேவர்தன, ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் தெரிவுக்குழு அழைப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும் அழைத்து விசாரிப்பதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தற்போது சாடசியங்களை பதிவு செய்துவருகின்றது.

பாதுகாப்பு துறையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களையும் அழைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க