வணிக செய்திகள்

தயக்கமின்றி முதலீடுகளை மேற்கொள்ளலாம்-பிரதமர் ரணில்

சந்தேகம், தயக்கம் இன்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலீட்டுக்கு தடையாக இருந்த குறைவான செயல்திறன் கொண்ட நிறுவனங்களின் மறுவாழ்வு சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

இது தெடர்பான சட்டத்தில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் வர்த்தகத்தை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தது.

இதனால், இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டிருந்தனர். எனினும் அந்த நிலை இப்பொழுது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் சமகால அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை தற்போது பொதுமக்கள் பெற்று வருகின்றனர் என பிரதமர் மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க