உள்நாட்டு செய்திகள்புதியவை

இந்திய புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட உள்ளோம்- இராணுவ தளபதி

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய புலனாய்வுப் பிரிவுடன் புரிந்துணர்வுடன்  செயற்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதுலுஓய விசேட படை முகாமில் நேற்று ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பயங்கரவாத வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டுள்ளது,

பாதுகாப்பிற்கான புலனாய்வுப் பணிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடுவதால் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே எப்பொழுதும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க