வெளிநாட்டு செய்திகள்

பெண் நீதிபதிக்கு தொல்லை கொடுத்ததில் அமெரிக்கர் ஒருவர் கைது :

ஷில்லாங் மேகாலயா பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முறைப்பாடு செய்ததில் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  வட கிழக்கு பிரதேசமான மேகாலயாவில் ஷில்லாங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார். அதே வீட்டின் கீழ் தளத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தியோடர் மாயெல்லம் என்பவருக்கு நீதிபதி வாடகைக்கு கொடுத்து இருந்தார்.  தியோடர் அந்த இடத்தில் பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது  தொடர்பில் இருவருக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டது. அப்போது தியோடர் நீதிபதியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.  இது தொடர்பான வழக்கில் தியோடர் கைது செய்யப்பட்டார்.

கருத்து தெரிவிக்க