உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:சிறுவர்களுக்கு நன்கொடைதேவை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் 7 சிறுவர்களுக்கு நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.

எனவே உதவி செய்ய விரும்புவோர் 0112778911 அல்லது 2778912 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் 7பேருக்கும் மண்டையோடுகளில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 23 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

72 சிறுவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தேவைப்படுவதாக சிறுவர் அதிகாரசபையின் தலைவர் எச்எம் அபேரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க