உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:உயிரிழந்தோர் 255 ஆக உயர்வு.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் போது காயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீர்கொழும்பு கெரவலப்பிட்டிய தேவாலயக் குண்டு தாக்குதலில் காயமடைந்தவராவார்.

சித்தாங்கனி பெரேரா என்ற இவரின் மகனான கட்டான பிரதேச சபை உறுப்பினர், மருமகள் ஆகியோர் குண்டுத்தாக்குதலின் போது ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் சித்ராங்கனியின் மரணத்தை அடுத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது

கருத்து தெரிவிக்க