உள்நாட்டு செய்திகள்புதியவை

முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

நீர்கொழும்பு -மீரிகம பிரதான வீதியில் உள்ள போத்தோட் பொது கல்லறைக்கு அருகே முச்சக்கர வண்டி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் மூவர் காயமடைந்தனர்.

தெருவில் உள்ள நாய் ஒன்று முச்சக்கரவண்டியில் மோதவிருந்த நிலையில், அதனை சாரதி தவிர்க்க முயன்றுள்ளார். இதன்போது குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி சென்றதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் இந்த விபத்தில் தூக்கியெறியப்பட்டு வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த விபத்தில் சிக்கி சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் 72 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பயணிகள் இருக்கையில் இருந்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க