உள்நாட்டு செய்திகள்பண்பாடு

ரிஷாட் பதியுதீனை மீண்டும் அமைச்சராக நியமிக்க கூடாது-ஆனந்த சாகர தேரர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் அமைச்சரவை அமைச்சராக நியமிக்க கூடாதென இலங்கை தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு அளித்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனை மீண்டும் அமைச்சராக நியமிப்பது அவருக்கெதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு தடையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாட்டுக்கும் ஆனந்த சாகர தேரருக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க