உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியாவில் காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு

கடந்த 08 ஆம் திகதி காணாமல் போன வவுனியா பண்டாரிக்குளத்தை சேர்ந்த வயோதிபர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று காலை புளியங்குளம், பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளஞ்சிங்கம் தேவராசா என்ற 74வயதுடைய வயோதிபர் கடந்த 08.06.2019முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் பத்திரிகை விளம்பரங்களின் ஊடாகவும் அவர் தேடப்பட்டு வந்தார் . இந்நிலையில் அவரது சொந்த இடமான புளியங்குளம் பெரிமடு காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சத்துவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க