விளையாட்டு செய்திகள்

பலம் வாய்ந்த இங்கிலாந்தை எப்படி வீழ்த்தினோம் ? மலிங்க விளக்கம்

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றியடைந்திருந்தது.

எவரும் எதிர்பாராத வகையில் பலத்துடன் இருந்த இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது தொடர்பில் இலங்கை அணி வீரர் லசித் மலிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

‘முக்கியமான துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்திய பின்னும், பென் ஸ்டோக்ஸ் மாத்திரம் எங்களுக்குக் இறுதி வரை அச்சுறுத்தலாகவே இருந்தார். அவர் எங்களின் பந்து வீச்சில் அதிக 4 ஓட்டங்களை அடித்தார்.

ஆனால், எங்களின் திட்டத்தில் நாம் தெளிவாக இருந்தோம். தொடர்ந்து சரியான முறையில் பந்துகளை அவருக்கு வீசிக் கொண்டே இருந்தோம். நிச்சயம் துடுப்பாட்ட வீரர்களுக்கு எதுவாக பந்து வீச்சை பயன்படுத்தி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதுவே நாங்கள் வெற்றி பெற உதவியது’ என தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 232 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், 2 போட்டிகள் கைவிடப்பட்டதால் 6 புள்ளிகளுடன், தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.

இதனால், இலங்கை அணி அரையிறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பை  தக்க வைத்துக்கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க