வெளிநாட்டு செய்திகள்

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடும் போரிஸ் ஜோன்சன் வீட்டில் குழப்பம் :

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜோன்சன் வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட குழப்பம் காரணமாக அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போரிஸ் ஜோன்சன் தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்து விட்டு கேரி சைமண்ட்ஸ் என்ற இளம் பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் பொருட்களை தூக்கி எறியும் சத்தங்கள் கேட்டுள்ளது‌. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் தனது போனில் அதனை பதிவு செய்ததாக தெரிவித்ததோடு , ” வீட்டை விட்டு வெளியே போ” , ” என்னைத் தொடாதே” என்ற சத்தங்களும் கேட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போரிஸ் ஜோன்சனுக்கும் அவரது காதலிக்கும் சண்டையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில் பக்கத்து வீட்டுக்காரர், இருவரும்  ஒருவரோடு ஒருவர் கத்தி வாக்குவாதம் செய்ததாகவும், தொடர்ந்து கண்ணாடி பொருட்கள் உடைகின்ற சத்தமும் கேட்டதால், ஜோன்சனின் வீட்டுக் கதவைத் தட்டியும் எவரும் திறக்கவில்லை என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

இச் சம்பவத்தினால் போரிஸ் ஜோன்சனுக்கு பின்னடைவு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க