இலங்கை

மீண்டு சர்ச்சையில் சிக்கிய சுமந்திரன்; கொந்தளிக்கும் தமிழ் மக்கள்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் இலங்கை நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று இலங்கை நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இலங்கை என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, இலங்கை தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க