உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்ற சஹ்ரானின் திட்டம்!

தேசிய தவுஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் இலங்கையை கைப்பற்ற வேண்டும் என கூறியதாக சூஃபி முஸ்லிம் அமைப்பின்  முஹம்மது சஹிலான் மௌலவி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளியத்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சஹ்ரான் ஹாசிம் இது தொடர்பான திட்டங்களை வெளியிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று சஹ்ரான் கூறிவருவதாகவும் சஹ்ரானின் ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடர்பில் சாட்சியமளித்த சஹிலான் மௌலவி கூறினார்.

கருத்து தெரிவிக்க