உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டம்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தை சேர்ந்த சுமார் 30 பேர் தமக்கு வீட்டுத்திட்டத்தினை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வாய்ப்புக்கள் உள்ளமையை ஆதாரப்படுத்தும வரைபடத்தினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

நாகர் இலுப்பைக்குளம் கிராமத்தில் வாழும் சுமார் 34 குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பில் நாம் பல தடவைகள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கும் தெரிவித்துள்ளோம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கும் வீடுகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

எனினும் வீடுகள் உள்ளவர்களுக்கும் திருமணம் செய்யாதவர்களுக்கும் கூட வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.

எனவே எமக்கு வீடுகளை வழங்குங்கள் என்று கோருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் திருமதி வி. எம். வி. குரூஸிடம் கேட்டபோது, நாகர் இலுப்பைக்குளத்தை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்றைய தினம் என்னை வந்து சந்தித்தபோது முடிந்தளவு உச்சவரம்புக்கள் உள்வாங்கி வேலைத்திட்டத்தினை முன்னெடுப்போம் என உறுதியளித்ததாக தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க