உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கையின் ‘ராவணா 1’ விண்ணில் செலுத்தப்பட்டது

இலங்கையின் முதலாவது செயற்கைக்கோளான ‘ராவணா 1 ‘ இன்று பிற்பகல் 3 .45 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஆத்தர் சி கிளார்க் மத்திய நிலைய தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கவிந்திர ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

‘ராவணா 1’ தரிந்து தயாரட்ன மற்றும் டுலானி சாமிக்க விதானகே ஆகிய பொறியியலாளர்களால் ஜப்பானின் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செயற்கைகோளாகும்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி ‘ராவணா 1 ‘ நாசாவினால் என்டரெஸ் ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட நிலையில் அது ஏப்ரல் 19 ஆம் திகதி மாலை 6 .30 இற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க