கிழக்கு செய்திகள்

பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனங்கள்

அரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இப்பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு பின்னர் இந்நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வின்போது, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 95 உத்தியோகத்தர்களும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த103 உத்தியோகத்தர்களுமாக 198 பேருக்கு நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இன் நியமனங்களைப் பெற்றவர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுப் பயிற்சிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மாகாண விளையாட்டு இணைப்பாளர்கள், விளையாட்டு பிரிவின் நிருவாக அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க