உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தாம் தயார்! – மஹிந்த

அடுத்து வரும் எந்தவொரு தேர்தலையும் தாம் எதிர்கொள்ள தயாரென எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையிலுள்ள இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று தங்காலை கால்டன் இல்லத்திற்கு சென்ற எதிர்கட்சித் தலைவர் மிந்த ராஜபக்ஷவை அப்பகுதியிலுள்ள மக்கள் சந்தித்துள்ளனர்.
அடுத்து நடைபெறவிருப்பது ஜனாதிபதி தேர்தல். அடுத்து நாடாளுமன்றத்தின் ஆதரவுடனேயே நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்த முடியும்.
நாடாளுமன்றத்தில் 3இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இருந்தாலே நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியுமெனவும், எவ்வாறாயினும் எந்தவொரு தேர்தலுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க