உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

பேராயர் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்புக்கு விஜயம்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, மட்டக்களப்புக்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்துக்கு விஜயம் செய்த ஆண்டகை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.

இந்த விஜயத்தின்போது, இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட பலர் இணைந்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க