உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மன்னார் பேசாலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மன்னார் பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பேசாலை உதயபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிடப்பட்டது.

இதன் போது 22 கிலோ 100 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வருகின்றது.

கருத்து தெரிவிக்க