வடக்கு செய்திகள்

வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறக்கப்பட்டது

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று காலை 10மணியளவில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மரியநாயகம் வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலய பிரதி அதிபர் ம.ஜெகதீஸ்வரன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார பண்டாரிகுளம், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர், மா. அதிர்ஷ்ட செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக பாடசாலை போஷகர்,ஆசிரிய ஆலோசகர் திருமதி. உ.சூரியச்செல்வன், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர், திருமதி .செ.விஜயகாந்தன் சமுர்த்தி உத்தியோகத்தர், பெற்றோர்கள் மாணவர்கள். ஆசிரியர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க