உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இரத்த ஆறு ஓடாமல் தடுக்கவே முயற்சித்தேன்: ஹிஸ்புல்லா வாக்குமூலம்

இலங்கையில் இரத்த ஆறு ஓடாமல் தடுக்கவே முயற்சி செய்ததாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு இன்று வியாழக்கிழமையும் வாக்குமூலங்களை பதிவு செய்தது.

இதன்போது, குறித்த தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் எம்.ஏ. சுமந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கிழக்கு மாகாண முன்னாள்  ஆளுநர் ஹிஸ்புல்லா இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எமது மக்கள் பொறுமையுடன் செயற்படுகின்றார்கள் என்பதையே நாடாளுமன்றில் எடுத்துக் கூறினேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நீதிபதியை மாற்றியமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதால் பதில் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

 

கருத்து தெரிவிக்க