உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதினால்

வறட்சியினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைதுவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கனக ரெட்ணம் திலீபன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார், மடு, மாந்தை , முசலி , நானாட்டான், ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் மற்றும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம் முழுவதிலும் 17 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 823 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 31 ஆயிரத்து 280 பேருக்கு அனார்த்த முகாமைத்துவ நிவாரண பிரிவினரால் தற்காலிக குடி நீர் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு நாளைக்கு சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் குடிநீர் பௌசர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் பெரும்பாலான சிறிய குளங்கள் நீர் அற்ற நிலையிலும் நடுத்தர குளங்களான அகத்திமுறிப்பு , கூராய் போன்ற குளங்கள் மிகவும் குறைவான நீரை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கான கோரிக்கை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க