உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலைகளில் பாதுகாப்புக்காக பெற்றோர் அவசியமில்லை!

பாடசாலைகளில் பாதுகாப்புக்காக பெற்றோரை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வதற்கான தேவை இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து 25/2019 என்ற சுற்றறிகைக்கு அமைய பாடசாலைகளில் பெற்றோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது நாட்டில் நிலவு சாதாரண நிலையை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தொகுதி பொறுப்பு பிரதி மற்றும் உதவி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை தலைமை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க