உள்நாட்டு செய்திகள்புதியவை

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது மஹிந்தானந்த அளுத்கமகேயின் இலங்கை வங்கியில் உள்ள நாடாளுமன்ற கிளை வங்கிக் கணக்கு சம்பந்தமாக வங்கியின் அதிகாரி சாட்சியமளித்தார்.

இதனையடுத்து, மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க