உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

காலை 10 மணிக்கு தமிழ் – சிங்கள மொழிகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்வுள்ளது.

இதேவேளை, கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் முழுமையாக சேதமடைந்திருந்த கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று மாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் புனிதத்தின் அடையாளமாக திருத்தலத்தின் உட்புறச் சுவர்களில் பேராயர் திருச்சிலுவை அடையாளம் வரைந்து அபிஷேகம் செய்யும் சடங்கும் இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க