உள்நாட்டு செய்திகள்புதியவை

சேகு சியாப்டீனுக்கு எதிராக 995 முறைப்பாடுகள் பதிவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் சாபிக்கு எதிராக இதுவரை 995 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதில் குருநாகல் போதனா மருத்துவமனையில் 802 முறைப்பாடுகளும் தம்புள்ளை மருத்துவமனையில் 153 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சேகு சியாப்டீன் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளின் பின்னர் தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என முறைப்பாடுகளை முன்வைத்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொடர்ந்தும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதுடன் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க