வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்- இராணுவம் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதல்கல்களில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சாபூல் மாகாணத்தில் டே சோபான் மாவட்டத்தில் உள்ள படை வீரர்களின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதனை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் தலீபான் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டுள்ளார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க