உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் மேலும் இரண்டு முக்கியஸ்தர்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்று புதன்கிழமை ஆஜராகவுள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கும் மீண்டும் கூடுகிறது. இதில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சிலரிடம் கடந்த வாரம் முதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க