உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தலவாக்கலை லிந்துலையில் ஒரே இரவில் 8 வீடுகளில் கொள்ளை

லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வோல்ட்ரீம், மற்றும் சென் கூம்ஸ் ஆகிய பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 8 வீடுகளில் நேற்றிரவு உட்புகுந்த இனந்தெரியாதோர் அங்கிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

லிந்துலை சென் கூம்ஸ் தோட்டத்தில் 2 வீடுகளும் வோல்ட்ரீம் தோட்டத்தில் 6 வீடுகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன

இதன்போது குறித்த வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மூவரின் தங்கச் சங்கிலிகள் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க