உள்நாட்டு செய்திகள்புதியவை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் – சிங்கள மக்களுக்கு உரிமை இல்லை!

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தை கையில் எடுக்க சிங்கள மக்களுக்கு உரிமை இல்லை என மவரலெ பாத்திய தேரர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே, முஸ்லிம் பெண்கள் அணியும்  ஆடை விவவகாரம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் அவசரகால சட்டத்தின் பிரகாரம் முகத்தை முழுமையாக மூடியவாறு வெளியில் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் அவர்கள் அவ்வாறு முகத்தை முழுமையாக மறைத்து வந்தாலும் அதனை அகற்றுவதற்கு எமக்கு உரிமை இல்லை எனவும் அவர் கூறினார்.

இது குறித்து பொலிஸாருக்கோ அல்லது விஷேட அதிரடி படையினருக்கோ தகவல் வழங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க