உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கோட்டாபயவே ஜனாதிபதி வேட்பாளர்- பெசில் உறுதிப்படுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்; என்று முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் பெசில் ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் பெசில் குறிப்பிட்டார்.

அது கோட்டாபயவாகவே இருப்பார் என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க