உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தற்கொலை குண்டுதாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கடந்த உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் உடலை  இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்ய இன்று எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆலையடிச்சோலை கிராம மக்கள் ஆலையடிச்சோலை மயான வாசலில் தமது எதிர்ப்பை காட்டும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“தமிழரது புனித மயானத்தில் ஐஎஸ்.ஐஎஸ், தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே”

“ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே” “பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும்” எனும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் இதில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியின் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிசார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கினர்.

கருத்து தெரிவிக்க