வெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மனநல மருத்துவமனையில் தீ விபத்து-6 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் உள்ள, நகராட்சி கட்டடமொன்றில் இயங்கி வந்த மனநல மருத்துவமனை தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க