உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அலுகோசு பதவிக்கான பரீட்சைகள் இன்றும் நாளையும்?

மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அலுகோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்று செயன்முறை பயிற்சியொன்றையும் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறைச்சாலை பயிற்சி பாடசாலையில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பதவிக்கான நேர்காணல் பரிட்சையில் இதுவரை 26 பேர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை இடம்பெறும் செயன்முறை பயிற்சிகளை தொடர்ந்து இடம்பெறும் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் இருவர் அலுகோசு பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க