உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மர்மமான முறையில் பெண் மாயம் – திருக்கோவிலில் சம்பவம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் நேற்று திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் காணாமல் போன பெண்ணின் கணவர் திருக்கோவில் பொலிஸில் மமுறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மர்மமான முறையில் காணாமல்போன பெண் திருக்கோவில் விநாயகபுரம் -02 பாடசாலை வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான வெற்றிவேல் கனகம்மா எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க