உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாட்டின் பாதகாப்பு இன்னும் வழமைக்கு வரவில்லை! பொசொன் கொண்டாடுவதில் அவதானம்! – சரத் பொன்சேகா

நாட்டின் பாதுகாப்பு இன்னும் வழமைக்கு திரும்பவில்லையென முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்டின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தற்போதைய நாட்டின் பாதுகாப்பு நிலைமையின் காரணமாக இம்முறை பொசொன் தினத்தை கொண்டாடுவதில் அவதானம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“எவ்வித அறிவும் இல்லாத முட்டாள்கள் தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை வழமைக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள், அப்படி உடனடியாக தீவிரவாதம் முடிவுக்கு வராது. நான் முதலில் இருந்து கூறுவதுதான், ஒருமாதம், இரண்டு மாதங்களில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. அப்படி முற்றாக ஒழித்திருந்தார், உலகில் ஏனைய நாடுகளும் எங்களை அழைத்திருக்கும், தீவிரவாதத்தை ஒழித்துத் தாருங்கள் என்று.”

கருத்து தெரிவிக்க