உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பதவி விலகிய முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க வேண்டும் – பௌத்த பிக்குகள்

அரசிலிருந்து விலகிய கபீர் ஹஷீம் உட்பட முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் தெரிவித்துள்ளது.

மாவனல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

என்றபோதிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மேலும் சில பௌத்த பிக்குகள் குறுக்கிட்டு தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிக்குகள், அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய கபீர் ஹஷீம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க