உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அரபுமொழி பெயர் பலகைகளை அகற்றுவற்கான சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அரபு எழுத்துக்களில் உள்ள வீதிகளின் பெயர்பலகைகளை அகற்றுவதற்கான சுற்றுநிருபம் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரபு மொழியில் எழுத்தப்பட்டுள்ள பெயர்பலகைகள் சட்டத்தை மீறும் செயல் என்ற அடிப்படையிலேயே அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொது மொழிக்கொள்கையின்படி வீதிகளின் பெயர்கள் ஆங்கிலம் சிங்களம் மற்றும் தமிழ் அல்லாத வேறு மொழிகளில் இருக்கக்கூடாது.

எனினும் மாற்று மொழிகளில் பெயர்பலகை அமைக்கப்படவேண்டுமெனில் அதற்கு அனுமதிப்பெறப்படவேண்டும் என்ற அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க