Uncategorizedவடக்கு செய்திகள்

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இருவர் படுகாயம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கேப்பாபுலவு வீதியில் நேற்று முன்தினம் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

இந்த விபத்தில் படுகாயமனடைந்த முள்ளியவளையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த விபத்து குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்து தெரிவிக்க