கிழக்கு செய்திகள்

ரனவிரு சேவா அதிகார சபை பத்தாண்டை நிறைவு செய்கிறது

ரனவிரு சேவா அதிகாரசபையின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொடிவாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட ரனவிரு சேவா அதிகாரசபையின் இணைப்பாளர் திருமதி கீர்த்திக்கா ஐயசிங்க கொடிதினத்தினை ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமாருக்கு முதற்கொடியினை அணிவித்து கொடிவாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கொடி அணிவிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு படையினர் இதனை செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க