உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூறல்

கடந்த 1998ஆம் ஆண்டு இதே நாளில் சுதந்திரம் பகுதியில் இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விசேட நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது
இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பறிகொடுத்த புஸ்பநாதன் இந்திராணி என்பவர் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் திரு உருவப் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன
குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தாக்குதலில் தங்களுடைய உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

கருத்து தெரிவிக்க